Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் அமித்ஷா -அஜித்பவார் குற்றச்சாட்டு

பிப்ரவரி 09, 2021 12:03

மும்பை :மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சிந்துதுர்க்கில் நடந்த தனியார் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மராட்டியத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் தவறாக நடத்தப்படுவதாக கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை துணை முதல்-மந்திரி அஜித்பவார் மறுத்து உள்ளார். மேலும் அவர் அமித்ஷா உண்மைக்கு புறம்பாக பேசியிருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எங்களில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை ஆலைகளுடன் தொடர்பு உள்ளவர்கள். ஏன் நாங்களே எங்கள் இடத்திற்குள் பிரச்சினை ஏற்படுத்தி கொள்ள போகிறோம்?. உண்மையென தெரிந்தால் மட்டுமே ஒருவர் அதை பேச வேண்டும். அவர் கூறுவது போல எதுவுமில்லை. சர்க்கரை ஆலைகள் தொடர்பாக கொள்கைகள் உள்ளது" என்றார்.

மேலும் முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது குறித்து எந்த வாக்குறுதியும் சிவசேனாவுக்கு வழங்கப்படவில்லை என அமித்ஷா கூறியது குறித்து கேட்டபோது, "அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தான் தெரியும். நான் இதில் என்ன கூறுவது?. நான் ஜோசியர் கிடையாது. என்ன நடந்தது என எனக்கு தெரியாது" என்றார்.

தலைப்புச்செய்திகள்